விதையும்
அறுவடையும்
மழையை நம்பி
மனைவியின் தாலியை விற்று
வானம் பார்த்த பூமியில்
விதை விதைத்தவனே !
ஆற்று நீர் வருமென்று
அண்டா குண்டா அடகுவைத்து
அரை வயிற்றுக்கு கஞ்சிகூட இல்லாமல்
இருக்கும் விதையை விதைத்தவனே !!
ஆற்றுநீரையும் மழைநீரையும் நம்பி
உடைமையே எல்லாம் விதைத்து
உயிரை அறுத்து விட்டான்
நம்ம ஊரு விவசாயி ....
பெ.பாமா
கவிதை அருமை உள்ளதா
ReplyDelete